Random Video

Atlee Speech | என்னுடைய அண்ணன் தளபதி விஜய் ! - டாக்டர் பட்டம் பெற்ற பின் அட்லீ பேச்சு !

2025-06-16 1 Dailymotion

பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்த அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவர் இயக்கிய முதல் திரைப்படமே மிகப்பெரிய அளவில் வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து, இவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது பேசிய அட்லீ, எனக்கு கொஞ்ச நாளாக பொய் சொன்னால், இருமல் வந்துவிடுகிறது. இப்போது நான் எதாவது பொய் சொன்னால் இரும்பி விடுவேன் என்று பேசத் தொடங்கினார் அட்லீ. நாம் ஊருக்கு என்னவாக இருந்தாலும், வீட்டுக்கு அரசன் என்று சொல்வார்கள். அரசனாக வேண்டும் என்றால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், போருக்கு செல்ல வேண்டும். ஆனால், இது எல்லாம் செய்வதற்கு முன்பே நம்மை அரசனாக்கி அழகு பார்த்தவர்கள் நம் பெற்றோர். ஆனால், இந்த கல்லூரி என்னை ஆரம்பத்தில் இருந்தே வெற்றியாளனாகவே பார்த்தது. அதற்கு சத்யபாமா பல்கலைக்கழகத்திற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் தளபதி விஜய் குறித்தும் அவர் வாழ்கை பயணம் குறித்து பேசியுள்ளார் !